by Vignesh Perumal on | 2025-07-09 12:18 PM
குஜராத் மாநிலத்தில் ஆற்றுப்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் பல கார்கள் ஆற்று நீரில் மூழ்கின. இதுவரை ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இந்தப் பாலம், இன்று (ஜூலை 9) அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்தபோது, அதன் மீது சென்று கொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி மற்றும் பல கார்கள் ஆற்றுக்குள் விழுந்தன. ஒரு டேங்கர் லாரி அந்தரத்தில் தொங்கியவாறு நிற்கும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர், ஆற்றுக்குள் மூழ்கிய வாகனங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கிய மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். நீண்டகாலப் பழமையான இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளனர். "பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதை அதிகாரிகளுக்குப் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். அதிகாரிகளின் அலட்சியமே இந்தக் கோர விபத்திற்குக் காரணம் எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பழைய பாலங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்துப் பெரிய அளவில் கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!