by Vignesh Perumal on | 2025-07-08 06:14 PM
திண்டுக்கல் நந்தவனப்பட்டி புறவழிச்சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஒரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை, எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நகரின் முக்கியப் பகுதியான நந்தவனப்பட்டி புறவழிச்சாலை, வாகனப் போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையாகும். இந்தச் சாலையோரம் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரிய விளம்பரப் பலகை, அதன் அடிப்பகுதி வலுவிழந்த நிலையில், சாய்ந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்குகிறது. காற்றின் வேகம் அல்லது சிறிய அதிர்வு ஏற்பட்டால் கூட, இந்த பலகை கீழே விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது.
பலகையின் எடையும், அதன் உயரமும் கருத்தில் கொள்ளும்போது, அது விழுந்தால் அருகில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அல்லது கார்கள் மீது விழுந்து பெரும் உயிர் சேதத்தையோ அல்லது பொருட்சேதத்தையோ ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
"இந்த விளம்பரப் பலகை உயிரைக் காவு வாங்க காத்திருக்கிறதா?" என்று வேதனையுடன் கேட்கும் பொதுமக்கள், "ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆபத்தான விளம்பரப் பலகையை அப்புறப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் போது மிகுந்த பயத்துடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உடனடியாக இந்த விளம்பரப் பலகையின் உரிமையாளரை அடையாளம் கண்டு, பலகையை அப்புறப்படுத்த அல்லது பாதுகாப்பாகச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !
புலிகள் காப்பகம் - மீட்டெடுக்கும் பணி தீவிரம் !
முதலையை பிடிக்க நடவடிக்கை - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல் !