by Vignesh Perumal on | 2025-07-03 03:41 PM
தமிழகத்தில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட புகார் வழக்கில், வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வார காலத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) பல்வேறு கொள்ளளவு கொண்ட சுமார் 45,800 மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல் செய்தது. இந்த கொள்முதலில் சுமார் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அரப்போர் இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் அளித்தது.
அரப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனுவில், 10 ஒப்பந்தப்புள்ளிகளில், ஏழு ஒப்பந்தப்புள்ளிகளில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் (25 முதல் 37 நிறுவனங்கள்) ஒரே விலையை குறிப்பிட்டிருந்ததாகவும், இது தமிழக ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்து புதிய ஒப்பந்தப்புள்ளிகளை கோராமல், TANGEDCO ஒப்பந்தங்களை வழங்கியது என்றும், 500kVA மின்மாற்றிகள் ஒவ்வொன்றும் ரூ.7.89 லட்சம் மதிப்புடையதாக இருந்தபோதிலும், ரூ.12.49 லட்சம் என்ற உயர்த்தப்பட்ட விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த முறைகேடு நடந்த காலகட்டத்தில், வி.செந்தில் பாலாஜி தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த தகவலை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.
இந்த வழக்கு, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் புகார்கள் மற்றும் அதன் மீதான அரசு நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசு எடுக்கும் முடிவு, இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்கும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!