by Vignesh Perumal on | 2025-04-28 04:37 PM
தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்கள் 2,833 கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28, 2025) காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: 'தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்கள் 2,833 கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு காவல் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. விரைவில் அறிவிப்பாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!