| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

இரண்டாம் நிலை காவலர் காலிப்பணி..! நியமனம் குறித்து முதலமைச்சர் அப்டேட்...!

by Vignesh Perumal on | 2025-04-28 04:37 PM

Share:


இரண்டாம் நிலை காவலர் காலிப்பணி..! நியமனம் குறித்து முதலமைச்சர் அப்டேட்...!

தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்கள் 2,833 கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28, 2025) காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: 'தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்கள் 2,833 கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு காவல் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. விரைவில் அறிவிப்பாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Good
at 2026-03-12 16:35:04
Good
Good
at 2026-03-12 16:35:35
Good

Leave a Comment