| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

இல்லையெனில் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்...! துணை முதலமைச்சர் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-04-28 02:35 PM

Share:


இல்லையெனில் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்...! துணை முதலமைச்சர் எச்சரிக்கை...!

மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது குறித்து ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாகிஸ்தானியர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும். அவர்கள் உடனடியாக மகாராஷ்டிராவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்" என்று எச்சரித்தார்.

மேலும், "பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றும் அவர் கூறினார்.

ஏக்நாத் ஷிண்டேயின் இந்த கருத்துக்கள், மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது இந்த எச்சரிக்கை, மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு ஒரு கடுமையான செய்தியாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், துணை முதலமைச்சரின் இந்த எச்சரிக்கை, மகாராஷ்டிரா அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது என்பதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Good
at 2026-03-12 16:35:04
Good
Good
at 2026-03-12 16:35:35
Good

Leave a Comment