by Vignesh Perumal on | 2025-04-27 11:42 PM
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 27, 2025) திண்டுக்கல்லில் உள்ள அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடம் புகட்டும் என்று தெரிவித்தார்.
அபிராமி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், "ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுக்கும். திருமாவளவன், சீமான் ஆகியோர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும்" என்று கூறினார்.
மேலும், "பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்த நாட்டையும் இந்தியா அனுமதிக்காது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, "தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கோவில்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், ஆன்மீக சுற்றுலா வளர்ச்சி பெறும்" என்று அவர் கூறினார்.
சி.பி. ராதாகிருஷ்ணனின் இந்த கருத்துக்கள், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது இந்த கருத்துக்கள், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!