by Muthukamatchi on | 2025-04-26 09:24 PM
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் எம்.புதுப்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக பந்தல் ராஜா ஆழ்ந்த இரங்கல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம். புதுப்பட்டி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெடி விபத்தால் காயமடைந்து 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். மேலும், தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 25 லட்சமும் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தலா 5 லட்சமும் இழப்பீடாக அறிவிக்க வேண்டும். மேலும் பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக வேண்டுகிறேன்
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !