by Muthukamatchi on | 2025-04-26 09:24 PM
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் எம்.புதுப்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக பந்தல் ராஜா ஆழ்ந்த இரங்கல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம். புதுப்பட்டி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெடி விபத்தால் காயமடைந்து 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். மேலும், தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 25 லட்சமும் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தலா 5 லட்சமும் இழப்பீடாக அறிவிக்க வேண்டும். மேலும் பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக வேண்டுகிறேன்
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!