by Vignesh Perumal on | 2025-04-25 10:24 PM
தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது குறித்தும், அவர்கள் வகித்து வந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுப்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் புதியவர்களை சேர்ப்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 30-ஆம் தேதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், அமைச்சரவையில் மாற்றம் குறித்த தகவல்கள் உண்மை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!