by Vignesh Perumal on | 2025-04-25 02:30 PM
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்க முடியாத தகுதியான பயனாளிகள் வரும் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
முதல்வர் மேலும் கூறுகையில், "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பு, மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத தகுதியான பெண்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள முகாம்களில் அவர்கள் விண்ணப்பித்து இந்தத் திட்டத்தின் பயனைப் பெற முடியும். "மக்களுடன் முதல்வர்" திட்டம், அரசின் சேவைகள் மக்களை நேரடியாக சென்றடைய உதவும் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த முகாம்கள் எங்கு, எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியான பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!