| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

மாநகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு....! இவர் யார் தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-24 10:26 AM

Share:


மாநகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு....! இவர் யார் தெரியுமா...?

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக செந்தில்முருகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணியாற்றி வந்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செந்தில்முருகன் தனது புதிய பணியை தொடங்கினார். கடந்த நான்கு ஆண்டுகளில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு நியமிக்கப்படும் நான்காவது ஆணையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆணையர் செந்தில்முருகனுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, மாநகராட்சியிடமிருந்து தனியார் ஆக்கிரமித்துள்ள சிறுவர் பூங்காவை மீட்பது, மாநகராட்சியின் வருவாயை அதிகரிப்பது மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது போன்ற முக்கிய பணிகளை அவர் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்முருகன், தனது முழு கவனத்தையும் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளிலும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் செலுத்துவேன் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் திண்டுக்கல் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவதற்கு பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார். புதிய ஆணையரின் வருகை திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.


செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment