| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்...!!! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை....!!!

by Vignesh Perumal on | 2025-04-24 10:10 AM

Share:


ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்...!!! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை....!!!

சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்றில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணம் கடலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையின்போது, பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பேருந்தில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், பணத்திற்கான சரியான ஆவணங்களோ அல்லது உரிய விளக்கமோ அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா அல்லது கணக்கில் காட்டப்படாத பணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை கொண்டு சென்ற நபர்கள் யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment