by Vignesh Perumal on | 2026-01-18 03:22 PM
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் மற்றும் ஆக்ஷன் ஹீரோ என வலம் வந்த நடிகர் ஜீவா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது வலுவான களம் எது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது 'தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம், எவ்வித பெரிய ஆரவாரமும் இன்றி வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைச் சிரிப்பு மழையில் நனைய வைத்துள்ளது. குறிப்பாகச் சமீபகாலமாகப் பெரிய அளவில் காமெடி படங்கள் வராத சூழலில், இப்படம் அந்த இடத்தைப் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
வழக்கமான மசாலா படமாக இல்லாமல், ஒரு புதிய கோணத்தில் கதை சொல்லப்பட்டிருப்பது படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
தனது பழைய ‘சிவா மனசுல சக்தி’ காலத்து ஜீவாவைப் பார்ப்பது போல உள்ளதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
படம் பெற்று வரும் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜீவா தனது எக்ஸ் தளத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "நீங்கள் பொழிந்த அளவற்ற அன்பு மற்றும் பாசத்தால் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படைப்பிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த ஆதரவு எனக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றிகள்!"
ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக தற்போது பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளாக மாற்றப்பட்டு வருகிறது. "சைலண்டாக வந்து பெரிய சம்பவம் செய்துவிட்டார் ஜீவா" என விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஜீவா நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தன. இந்நிலையில், இந்த 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி அவரது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இப்படத்தின் மூலம் மீண்டும் தனது பழைய வெற்றிப் பாதைக்கு ஜீவா திரும்பியுள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !