by Vignesh Perumal on | 2026-01-05 10:20 AM
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (ஜனவரி 5, 2026) அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை முதன்முறையாக சவரன் ரூ.1,01,400-ஐ கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440 என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விலையை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.261-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளிக் கட்டி இன்று ரூ.2,61,000 என்ற விலையில் விற்பனையாகிறது.
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் மத்திய வங்கிகளின் தங்க இருப்பு அதிகரிப்பு காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் வட்டி விகித மாற்றங்கள் தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !