by admin on | 2025-03-15 10:40 AM
ஆண்டிபட்டி, மார்ச்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில் உள்ள எரதிமக்காள்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் வரவேற்றுப் பேசி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஊர் பெரியதனம் வேலு, நாட்டாமை நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் ,கல்வி மேலாண்மை குழு சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி. வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கரகம், கோலாட்டம், திருக்குறள் ஒப்புவித்தல், ஓரங்க நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவ ,மாணவிகள் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை ! வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !!
அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை ! நிறுவனங்களில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.!!
பழனியில்....! ஆண்டிபட்டி தொழிலாளி அடித்துக் கொலை...! 3 பேர் கைது...!
சாத்தான்குளம் கொலை வழக்கு : சிபிஐ முறையீடு ! கோர்ட் உத்தரவு !!
10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...! புதிய அறிவிப்பு வெளியீடு...!