by Vignesh Perumal on | 2025-07-06 01:20 PM
நாமக்கல் அருகே வகுரம்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 6) அதிகாலை திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) ஒருவரும், அவரது மனைவியும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் (RTO) பணியாற்றி வந்த சுப்பிரமணி (40), மற்றும் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த அவரது மனைவி பிரமிளா ஆகியோர், இன்று அதிகாலை வகுரம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பெற்றோர் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவர்களது குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சனை, பணி அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மற்றும் திருச்சி வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !
புலிகள் காப்பகம் - மீட்டெடுக்கும் பணி தீவிரம் !