| | | | | | | | | | | | | | | | | | |
இராணுவம் ராணுவம்

விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி..! வீரர்களுடன் திடீர் கலந்துரையாடல்...!

by Vignesh Perumal on | 2025-05-13 01:47 PM

Share:


விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி..! வீரர்களுடன் திடீர் கலந்துரையாடல்...!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு திடீர் விசிட் மேற்கொண்டார். அங்கு அவர் விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

எல்லைப் பகுதியில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வீரத்தை அவர் பாராட்டினார். வீரர்களின் நலன் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

குறிப்பாக, சில நாட்களுக்கு முன்பு ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், பிரதமரின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விசிட், இந்திய விமானப்படையின் தயார்நிலையை உறுதிப்படுத்துவதாகவும், வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் கருதப்படுகிறது.


விமானப்படை வீரர்களுடனான கலந்துரையாடலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பிரதமர் மோடியின் இந்த திடீர் வருகை வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment