by Vignesh Perumal on | 2025-05-12 11:45 AM
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் பனிக்கன்குடி கொம்பு ஒடிஞ்சான் பகுதியில் இன்று (மே 12) காலை நிகழ்ந்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் சுபா மற்றும் அவரது தாயார் ஆவர். மேலும், சுபாவின் இரண்டு குழந்தைகளும் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.
வீடு தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பனிக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்திற்கான சரியான காரணம் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.
இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!