by Vignesh Perumal on | 2025-05-12 09:31 AM
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் நேற்று (மே 11, 2025) திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி திமுக சார்பில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு" என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கிப் பேசினர். குறிப்பாக, பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க கையேடு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் மாநகர பொருளாளர் சரவணன் ஆகியோர் இந்த கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். திமுக அரசின் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கையேடு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!