by Vignesh Perumal on | 2025-05-12 09:31 AM
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் நேற்று (மே 11, 2025) திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி திமுக சார்பில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு" என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கிப் பேசினர். குறிப்பாக, பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க கையேடு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் மாநகர பொருளாளர் சரவணன் ஆகியோர் இந்த கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். திமுக அரசின் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கையேடு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!