by Muthukamatchi on | 2025-05-12 02:47 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலத்தை சேர்ந்த சன்னாசி பிள்ளை அவர்கள் எழுதியுள்ள வாருங்கள் வாழப் பழகுவோம் என்ற நூல10 ,5, 2025 ஆம் நாள் மாலை 4நாலு மணி அளவில் வெளியீட்டு விழா நடைபெற்றது அதற்கு எனக்கு முற்றிலும் உறுதுணையாக இருந்து என்னை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டியது உமா நாராயணன் பதிப்பகம் ஆண்டிபட்டி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நான் இந்த புத்தகத்தை எனக்கு இப்போதுவயது 69 ஆகிறது நான் சுமார் 1986 முதல் 2015 ஆம் நாள் வரை 29 ஆண்டுகள் அங்காள ஈஸ்வரி கோவில் ஆயுட்கால அறங்காவலர் ஆகவும் வேளாளர் உறவின்முறை சங்க செயலாளராக 2009 முதல் 2017 வரை பொறுப்பில் இருந்து கொண்டு அகில உலக முதலியார் பிள்ளைமார் கூட்டமைப்பு இன்பா என்ற அமைப்பில் நான்காண்டுகள் துணைத் தலைவராகவும் நான்காண்டுகள் பொருளாளராகவும் நான்காண்டுகள் செயலாளராகவும் இருந்து செயல்பட்டு வந்தேன் .
அதற்குப் பின் இரண்டு ஆண்டுகள் அகில இந்திய முதலியார் பிள்ளைமார் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்து சமூக சேவை செய்து கொண்டு நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இலவசமாக கல்வி பயில அந்த அமைப்புகளின் மூலமாக பெற்றுத் தந்து கம்ப்யூட்டர் பயிற்சிகள் தையல் பயிற்சிகள் என்னை ஆட்டும் இயந்திரங்கள் தரை மிதியடி தயாரிக்கும் இயந்திரங்கள் ஒவ்வொரு ஊருக்கும் சுமார் 15 ஊருக்கு தேனி மாவட்டத்தில் பிரேதம் பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டிகள் இப்படி உதவிகளை செய்து சமூக சேவை செய்து வருகிறேன் ,
அப்படி பணிகள் செய்து வந்ததால் என்னால் எழுத்து பணி செய்ய முடியவில்லை மேற்படி இப்போது தேனி மாவட்ட பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளையில் துணை செயலாளராக இருந்து பணியாற்றி வருகிறேன் அதுபோல இப்போது நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரைபெண்கள் எவ்வளவு இன்பமாகவும் துன்பமாகவும் வாழ்கிறார்கள் முன்னாளில் மாமியார் கொடுமைகள் இருப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது சமகாலத்தில் மருமகள் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் இதில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் அது போல் நம் ஒவ்வொரு உயிருக்கும் தாய் இல்லாமல் நம் உயிர் இல்லை அந்த தாய் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நான் தொகுத்து எழுதி இருக்கிறேன் நம்மை பெற்றவளும் ஒரு தாய் நாம் பெற்ற பெண் பிள்ளைகள் பெற்றெடுக்கும் பிள்ளைகளும் சில குழந்தைகளுக்கு தாய் ஒன்று நம்மை பெற்றெடுக்கும் தாய் மற்றொன்று நமக்கு உணவு கொடுத்து உடை கொடுத்து நம்மை திரும்பவும் தன் மடியில் தாங்கிக் கொள்ளும் பூமியும் ஒரு தாய் அதுபோல் இயற்கை அன்னையும் நமக்கு ஒரு தாய் ஆக அந்த மூன்று தாய் இனத்தையும் சொல்லண்ணா துயரத்திற்கு ஆளாக்கி அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகளே அதாவதுநம் மனித இனம் அதை அழிக்கும் காலம் மன வேதனையை தருகிறது அதுபோல் விவசாயம் இல்லை என்றால் மனித உயிர்களே இல்லை அப்படிப்பட்ட விவசாயமும் அழிந்து கொண்டே வருகிறது.
விவசாயும் குறைந்து கொண்டே வருகிறார்கள் இப்போது உலகமே இமெயில் இன்டர்நெட் கம்ப்யூட்டர் செல்போன் இப்படி அனைத்தும் வந்து கொண்டே இருக்கிறது விவசாயும் விவசாயமும் முற்றிலுமாக 70% மேல்முற்றிலும் அழிந்து கொண்டே வருகிறது அதையெல்லாம் மனதில் நிறுத்தி இந்த சிறு தொகுப்பை நான் எழுதியிருக்கிறேன் இதை எழுதுவதற்கு என்னை என் இதயத்தில் குடியிருக்கும் என் மனைவியும் என் அன்பு மகள் கலை இலக்கியாவின் நினைவுமே அதற்கு முக்கிய காரணம் அவரை பற்றி ஒரு சிறு விளக்கம் தருகிறேன் எனக்கு 19 80 ஆம் ஆண்டில் ஜனவரி 14 தை மாதம் ஒன்றாம் 1தேதி எனக்கு மகளாக கலை இலக்கியா பிறந்தார் அவரின் இயற்பெயர் இந்திரா அவர் பிறந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வரும் வேளையில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போதே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார் அப்போது 15 பைசா போஸ்ட் கார்டு தான் இருக்கும் இந்த செல்போன் வசதிகள் எதுவும் அப்போது இல்லை அந்த கார்டில் கவிதைகள் எழுதி அனுப்புவார் முதல் முதலாக கன்னியாகுமரி காகம் சிறப்புகள் அவருக்கு கவிதை சிற்பி என பட்டம் வழங்கி கௌரவித்ததுகவிஞர் மு முருகேசன் அவர் மூலமாக இமைக்குள் நழுவியவள் என்றஒரு புத்தகம் எழுதி சாகித்ய அகாடமி விருதுக்கு அனுப்பி வெற்றியும் அடைந்தார் அதற்குப் பின் அவர் 11_12 பன்னிரண்டாவது அவருடைய அம்மாள் பிறந்த ஊர் ஜி கல்லுப்பட்டியில் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உறுதுணையாக வெண்மணி ஆசிரியர் அவருக்கு கிடைத்த மிகச் சிறந்த கவிஞர் இருவரும் சேர்ந்து அந்த இரண்டு ஆண்டுகள் கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்கள் எங்கெங்கு இந்த கவிதைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் வழிகாட்டி விட்டார் அதுபோல் கம்பம் உமர் பாரூக் அவரும் ஆலோசனை வழங்கி வந்தார் அது என் மகளுக்கு கிடைத்த வாய்ப்பு பிறகுபடிப்பை முடித்த பின் திருமணம் 2001 இல் தேனி மாவட்டம் வீரபாண்டியில சிகாமத்துரை என்பவர்க்கு மணமுடித்துக் கொடுத்தோம் மேலும் அவர்தொலை நிலை கல்வியில் தமிழ் இலக்கியம் கற்று தன் கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டார் அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒன்று ஜிவ பாரதி இன்னொரு பையன் ராஜேஷ் கபிலன் அவருடைய கணவரும்அவரும் ஒரு சோசலிச கொள்கையை கடைப்பிடிப்பவர் ஆகவே தொடர்ந்து நூல் எழுத ஆரம்பித்து விட்டார் அந்த சமயத்தில் நான் ஒரு லாரி விபத்தில் ஒரு காலையும் இழந்து விட்டேன் அதுவும் என் மகளுக்கு ஒரு மிகப்பெரிய பேரிடியாக இருந்தது அதற்கு பின்அதுபோல் பிரம்ம நிறைவு என ஒரு புத்தகம் எழுதி தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் அப்போது சென்னை ஐபிஎஸ் திலகவதி அவர்கள் வெளியிட நூற்றுக்கணக்கான கவிஞர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த என் ஆர் அழகுராஜா மதுரை திரு நன்மாறன்திருஎம் எஸ் எஸ் காந்தவாசன் திருபோடி என் ரவி பிள்ளை திருகாலா பாண்டியன்இன்னும் அதிகமான பிரபலங்கள் ஒன்று கூடி அந்தப் புத்தகத்தை வெளியிட்டார்கள் அதேபோல் திருவள்ளுவரின் காமத்துப்பால் உரை எழுதி விகடன் பதிப்பகம் வெளியிட்டது அதுபோலஒப்பாரி தொகுப்பு பாடல்கள் எழுதி மதுரை ராஜன் செல்லப்பா மேயர் அவர்கள் தலைமையில் வெளியிட்டது அதுபோல் பெண்மை திறவு என்ற புத்தகத்தை உமா நாராயணன் பதிப்பகம் ஆண்டிபட்டி எழுதி சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் பெரிய கருப்பை அவர்கள் வெளியிட்டு இலக்கிய திலகம் என்று பட்டம் கொடுத்தார் அதுபோல் சுமார் 12 புத்தகம் வரை எழுதி வெளியிட்டது குறிப்பாக பாண்டிச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அன்றைய சமகால அரசியலை துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து வெளியேறுவதைப் போல் அவரின் உரை வீச்சுஅரங்கமே அதிர கைதட்டிகுரல் கொடுத்து மக்கள் ஆர்ப்பரித்தனர் அவர் பேசியதை பாராட்டி அந்த பாண்டிச்சேரி மாநில எழுத்தாளர் கலைஞர் சங்கம் மக்கள் கவிஞர் என பட்டம் கொடுத்து கௌரவித்தது அதுபோல் சிறந்த நடுவர்கள் பங்கு வரும் பட்டிமன்றங்களில் பல பாராட்டுக்கள் பெற்றிருக்கிறார் அதுபோல் சிறந்த சொற்பொழிவாளராக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார் அதுபோல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாட்டினுடைய பெண் கவிஞர்கள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் இன்னும் பல பல்கலைக்கழக முனைவர்கள் அதுபோல் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து தென் கொரியா நான்கு நாட்டுனுடைய முனைவர்கள் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்று கூடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில் மத்திய மாநில அமைச்சர்கள் புடை சூழ கலை இலக்கியாவை முபின் சாதிகா அவருடைய தலைமையில் அனைத்து முனைவர்களும் ஒன்று சேர்ந்து நேர்காணல் செய்து அவருக்கு கலை இலக்கியாவின் படைப்புலகம் என்று ஒரு நூல் பொன்னம்பல அடிகளார் கைகளால் வெளியிட்டு அவருக்கு மூன்று நாள் மாநாடு நடத்தி பொன்னம்பல அடிகளார் அவரை கௌரவித்துபாராட்டு தெரிவித்ததும் பெருமைக்குரியது அதைப்போல் அவருடைய பெண் ஆளுமையை கவுரவித்து வருடா வருடம் அவர் இருக்கும் வரை 2019 வரை பெண் ஆளுமை விருதை தேனி மாவட்டத்தில் அவர் மட்டுமே வாங்கி வந்தார் என்ற பெருமையும் அவருக்கு உண்டு அதுபோல் அன்றைய சகாயம்ஐஏஎஸ் அவருடைய தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்அவர்கள் திண்ணை விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள் அதுபோல்ஒவ்வொரு புத்தகத்தையும்தமிழகத்தில் உள்ள தலைசிறந்த கவிஞர் அப்துல் ரகுமான் திரைப்பட நடிகர் ரோகினி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத் தலைவர் சா தமிழ்ச்செல்வன் கனிமொழி மதுரை சு வெங்கடேசன் மதுக்கூர் ராமலிங்கம் முல்லை நடவரசு இதய நிலவரம் அய்தமிழ்மணிவிசாகன் பட்டிமன்றம் நடுவர் கவிஞர் என் விவி இ இளங்கோவன் மோகனகுமாரமங்கலம் சிவாஜி லிங்கம் பாடல் ஆசிரியர் இயக்குனர் ஏகாதசி கவிஞர் உமர் பாரூக் மு முருகேசன் கவிஞர் மா கருப்பையா கரிசல் கருணாநிதிகடலூர் வெற்றிச்செல்வி இப்படிப்பட்ட கவிஞர்கள் இன்னும் எத்தனையோ கவிஞர்கள் பாராட்டும் விதமாக மாநில தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பொறுப்பிலும் தேனி மாவட்டத்தில் பொருளாளராகவும் இருந்து இன்றைய உலக அவல நிலையையும் அரசியலை தோலுரித்துக் காட்டி பல கவிதைகள் கட்டுரைகள் ஒப்பாரி பாடல்கள் இப்படி எழுதிய தோடும் பே ரோடும் புகழோடும் வாழ்ந்து வரும் வேளையில் பொல்லாத நுரையீரல் புற்றுநோய் வந்து ஒரு வருடத்திற்கு மேல் சொல்லண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் நாள் எங்களை எல்லாம் விட்டு இயற்கை எய்து விட்டார் என்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகவும் மனம் உடைந்து இருக்கும் வேளையில் தொடர்ந்து கொரோனா ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் எதுவும் செய்ய முடியவில்லை என்ற மன வருத்தம்இருந்து கொண்டே இருந்தது ஆனாலும் அந்த முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தில் அவரை அடிக்கடி நினைவு கூர்ந்து நினைவு பரிசுகள் நினைவுப் போட்டிகள் புத்தக வெளியீடுகள் இப்படி நிகழ்த்திக் கொண்டே இருந்தார்கள் என்ற பெருமையை பார்த்துக்கொண்டே இருந்தோம் அப்படிப்பட்ட ஒரு மகளைப் பெற்ற பெருமை என் மனதிற்குள் மாறாத வடுவாக தேங்கி இருந்தது நான் எப்படியும் அவரை நினைவு கூர்ந்து அவர் பிறந்த இந்த ஜெயமங்களம் கிராமத்தில் அவருக்கு புகழ் அஞ்சலி விழா எடுக்க வேண்டும் என்று என்னுடைய ஆவலை பூர்த்தி செய்ய எனக்கு உதவி செய்து ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பகத்தார் எனக்கு ஒத்துழைத்து அவருடைய நினைவாகவும் இன்றைய சமகால பெண்களின் அவல நிலையையும் இயற்கையின் அழிவையும் பூமியின் அழிவையும் சிறிது கட்டுரை நாவலாக எழுதி வெளியிட்டு அவருடைய ஆன்மா சாந்தியடைய பெற்றவர் என்ற ஒரு உணர்வோடு இந்த நூல் வெளியிட்டு விழாவை நடத்தி தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு K,S,சரவணன குமார் B,E,M,B,A,MLA அவர்கள் தலைமையிலும் மரியாதைக்குரிய தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு தங்க தமிழ்ச்செல்வன் M,A,M,P அவர்கள் நூலை வெளியிடநூல் முதல் பிரதியைபெற்றுக் கொண்டவர்கள் திரு M,S,S காந்தவாசன் தாளாளர் நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி கம்பம் அவர்கள் மற்றும்சேர்மன் திரு பொன் சந்திரகலா பொன்னுத்துரை பேரூராட்சி தலைவர் ஆண்டிபட்டி அவர்கள்மற்றும் மீனாட்சிசுந்தரம் தலைவர் நகர்நல கமிட்டி ஆண்டிபட்டி அவர்கள் பெற்றுக்கொள்ள விழா சிறப்புடன் நடைபெற்றதுநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு கவிஞர் அ பாண்டிய மகிழன் நிறுவநர் வராகநதி தமிழ்ச் சங்கம் இகர முதல்வி இதழ் ஆசிரியர் பெரியகுளம் நன்றி உரை திரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உமா நாராயணன் பதிப்பகம் ஆண்டிபட்டி மற்றும் இலக்கிய நண்பர்களும் சமுதாய பெரியோர்களும் அரசியல் பிரமுகர்களும் பத்திரிக்கை நண்பர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் நன்றி..
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!