by Vignesh Perumal on | 2025-05-11 06:41 PM
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று (மே 11, 2025), இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் மாணிக்கவாசகம் ஐ.ஏ.எஸ். அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், புகழ்பெற்ற தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலின் சிற்பக் கலை மற்றும் கட்டமைப்பு சிறப்புகளை யுனெஸ்கோ அங்கீகாரத்திற்காக மதிப்பீடு செய்வதாகும். கோவிலின் கலைநயம் மிக்க தூண்கள், மண்டபங்கள் மற்றும் இதர சிற்பங்களை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி மற்றும் கோவில் அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்கள் கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து செயலாளருக்கு விளக்கமளித்தனர்.
யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்த ஆய்வின்போது விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!