by Vignesh Perumal on | 2025-05-11 05:05 PM
மதுரை கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு டி.ஆர்.ஓ காலனி பகுதியில் "அன்னதானம்" நிகழ்ச்சி நடைபெற்றது. ராகவி சினி ஆர்ட்ஸ் மற்றும் லியானா குரூப்ஸ் இணைந்து இந்த அன்னதானத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஷாஜஹான், எஸ்.டி.சுப்பிரமணியன், முருகன் அப்பா பாலாஜி ஆகியோரின் நல்லாசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமை தாங்கினார்.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும், நடிகையுமான வைத்தீஸ்வரி (எ) பிரியா முன்னின்று 501 நபர்களுக்கு லட்டு, புளியோதரை மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மீசை மனோகரன், மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், செந்தில் நாதன், ஜெயகாமன், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும், நடிகையுமான அங்கிதா, பாக்ய லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர்.
அன்னதானத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு கள்ளழகர் திருவிழாவின் பக்திப்பூர்வமான சூழலில் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!