by Vignesh Perumal on | 2025-05-11 02:10 PM
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரனை தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் நேற்று (மே 10, 2025) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவர் பரமேஸ்வரனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ். விஜயன் மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.
பஹல்காமில் சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர் பரமேஸ்வரன் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!