by Vignesh Perumal on | 2025-05-10 05:46 PM
பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டையொட்டி, புதுச்சேரியில் நாளை (மே 11) பகல் 1 மணி முதல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நாளை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் புதுச்சேரி கலால்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நாளை பகல் 1 மணி முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து விதமான மதுக்கடைகள், பார்கள், கள்ளுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால்துறை எச்சரித்துள்ளது.
இந்த அறிவிப்பால், புதுச்சேரியில் மது விற்பனை நாளை பகல் 1 மணி வரை மட்டுமே இருக்கும். எனவே, மது பிரியர்கள் அதற்குள் தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டையொட்டி புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!