by Vignesh Perumal on | 2025-05-10 05:46 PM
பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டையொட்டி, புதுச்சேரியில் நாளை (மே 11) பகல் 1 மணி முதல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நாளை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் புதுச்சேரி கலால்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நாளை பகல் 1 மணி முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து விதமான மதுக்கடைகள், பார்கள், கள்ளுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால்துறை எச்சரித்துள்ளது.
இந்த அறிவிப்பால், புதுச்சேரியில் மது விற்பனை நாளை பகல் 1 மணி வரை மட்டுமே இருக்கும். எனவே, மது பிரியர்கள் அதற்குள் தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டையொட்டி புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் பலியான பரிதாபம் ! தீவிர விசாரணைக்கு உத்தரவு!!
வாக்கு எண்ணிக்கை ! வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !!
அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை ! நிறுவனங்களில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.!!
பழனியில்....! ஆண்டிபட்டி தொழிலாளி அடித்துக் கொலை...! 3 பேர் கைது...!
சாத்தான்குளம் கொலை வழக்கு : சிபிஐ முறையீடு ! கோர்ட் உத்தரவு !!