by Vignesh Perumal on | 2025-05-10 02:15 PM
திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பழநி கோட்ட மின் பயனீட்டாளர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் குறைதீர்ப்பு முகாம் எதிர்வரும் 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என்று செயற்பொறியாளர் பொறிஞர்.கொ.தி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த குறைதீர்ப்பு முகாமில், திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக செவிமடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
எனவே, பழநி கோட்டத்தைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது மின்வாரியம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!