by Vignesh Perumal on | 2025-05-10 11:40 AM
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், "நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் அதிமுக கட்சியும் தொண்டர்களும் அழிந்து நெல்லையில் அதிமுக இல்லை என்ற நிலை ஏற்படும். எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளையும் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், "அதிமுக தொண்டர்கள் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். எங்களது கோரிக்கையை ஏற்று, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும்" என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!