| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

போர் பதற்றம்...! போக்குவரத்து மாற்றம்..! முதலமைச்சர் உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-05-10 11:21 AM

Share:


போர் பதற்றம்...! போக்குவரத்து மாற்றம்..! முதலமைச்சர் உத்தரவு...!

பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி சென்னை காமராஜர் சாலையில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இந்த பேரணி காரணமாக, சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (MTP) மாலை 4 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.


போக்குவரத்து மாற்றங்கள்:

காமராஜர் சாலையில் இருந்து போர் நினைவு சின்னம் வரை பேரணி நடைபெற உள்ளது. எனவே, காமராஜர் சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மாற்று வழிகள்:

வாகன ஓட்டிகள் அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அடையார் சாலை போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பேரணி முடியும் வரை காமராஜர் சாலையில் பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment