by Muthukamatchi on | 2025-05-09 08:18 PM
தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் தேனி மதுரை மாவட்டங்களை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழா கலந்து கொண்டு தீச்சட்டி ஆயிரம் கண் பானை எடுத்தல் காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பக்தர்களுக்குதேனி மாவட் டம் தேனி நகர் பாஜக சார்பில்கோடை வெயில் காலத்தில் மற்றும் வீரபாண்டி_கெளமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் விதமாக நீர் மோர் பந்தலை மாவட்டபாஜக தலைவர் P.இராஜபாண்டியன் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் . தேனி நகர் தலைவர் ரவிக்குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர், ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்..