by Vignesh Perumal on | 2025-05-09 05:08 PM
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லுவிடம் மனு அளித்தனர்.
இன்று (09.05.2025) பெரியகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் சென்ற பாஜகவினர், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில், "இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும் பெரியகுளத்தில் ஒரு அமைதியான விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பாஜகவினரிடம் உறுதியளித்தார். மேலும், பேரணி நடத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கிடைத்தால், பெரியகுளம் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஒன்றிணைந்து பேரணி நடத்த வாய்ப்புள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!