by Vignesh Perumal on | 2025-05-09 05:08 PM
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லுவிடம் மனு அளித்தனர்.
இன்று (09.05.2025) பெரியகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் சென்ற பாஜகவினர், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில், "இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும் பெரியகுளத்தில் ஒரு அமைதியான விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பாஜகவினரிடம் உறுதியளித்தார். மேலும், பேரணி நடத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கிடைத்தால், பெரியகுளம் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஒன்றிணைந்து பேரணி நடத்த வாய்ப்புள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!