by Vignesh Perumal on | 2025-05-09 11:16 AM
திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் இன்று (09.05.2025) அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் (சண்முகம்) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில செயலாளர் சண்முகம், தமிழகத்தில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளையை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். "மாநிலத்தின் இயற்கை வளங்கள் தொடர்ந்து சூறையாடப்படுவதை அனுமதிக்க முடியாது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கனிமவள கொள்ளையர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
மேலும், மாநிலத்தில் மதுபான விற்பனையை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். "மது விற்பனையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, அதன் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகளை தடுக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்தின் இந்த பேட்டி, கனிமவள கொள்ளை மற்றும் மதுபான விற்பனை தொடர்பான பிரச்சனைகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்தது. கட்சியின் சார்பில் தொடர்ந்து இந்த பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!