| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கோவிலில் திருட்டு முயற்சி..! இளைஞர் கைது..! எங்கன்னு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-05-09 10:50 AM

Share:


கோவிலில் திருட்டு முயற்சி..! இளைஞர் கைது..! எங்கன்னு தெரியுமா...?

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோவிலான பட்டத்து விநாயகர் கோயில் அருகே திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இன்று (09.05.2025) காலை பட்டத்து விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்தபோது, சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர், கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பக்தர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், பொதுமக்கள் பழநி நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக திருட முயன்றார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் இந்த துரிதமான நடவடிக்கையால் கோயில் சொத்துக்கள் சேதமடையாமல் தடுக்கப்பட்டது.

சமயபுரம் கோயில் அருகே நடைபெற்ற இந்த திருட்டு முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் உடனடி நடவடிக்கைக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment