by Vignesh Perumal on | 2025-05-08 01:00 PM
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதிக்கு கனிமவளத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த இலாகா மாற்றத்திற்கான உத்தரவை ஆளுநர் மாளிகை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அந்த உத்தரவில் பிறப்பித்துள்ளதாவது : "அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் கவனிப்பார். அமைச்சர் ரகுபதி, சட்டத்துறையுடன் கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனிப்பார். இந்த இலாகா மாற்றம் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் மாளிகையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இலாகா மாற்றம் நிர்வாக ரீதியிலான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!