by Vignesh Perumal on | 2025-05-08 01:00 PM
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதிக்கு கனிமவளத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த இலாகா மாற்றத்திற்கான உத்தரவை ஆளுநர் மாளிகை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அந்த உத்தரவில் பிறப்பித்துள்ளதாவது : "அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் கவனிப்பார். அமைச்சர் ரகுபதி, சட்டத்துறையுடன் கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனிப்பார். இந்த இலாகா மாற்றம் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் மாளிகையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இலாகா மாற்றம் நிர்வாக ரீதியிலான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!