by Vignesh Perumal on | 2025-05-07 10:03 PM
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தாக்குதல் சம்பவம் தொடர்பான கூடுதல் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் யாரேனும் சுற்றுலாப் பயணிகள் அல்லது பொதுமக்களிடம் இருந்தால், அவர்கள் உடனடியாக என்ஐஏவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
என்ஐஏ வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தாக்குதல் குறித்து மேலும் துப்பு துலக்குவதற்கும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும் இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:
மொபைல் எண்: 9654958816
லேண்ட்லைன் எண்: 01124368800
மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக வேறு ஏதேனும் தகவல்கள் அல்லது உள்ளீடுகள் தெரிந்திருந்தாலும், அவற்றை மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று என்ஐஏ கேட்டுக்கொண்டுள்ளது. தகவல்கள் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பஹல்காம் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பயங்கரவாத அமைப்புகளை கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விசாரணையை மேலும் துரிதப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எனவே, பஹல்காம் தாக்குதல் நடந்த சமயத்தில் அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அல்லது பொதுமக்கள் யாரேனும் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பதிவு செய்திருந்தால், தயவுசெய்து தேசிய புலனாய்வு அமைப்பை உடனடியாக தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!