by Vignesh Perumal on | 2025-05-07 12:30 PM
அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் இன்று (மே 7, 2025) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். தங்களது நீண்ட கால கோரிக்கைகளை அரசு செவிசாய்க்கவில்லை என்றும், சமூக நீதியை நிலைநாட்ட அரசு தவறிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர். அவர்கள் பேசுகையில், "நாங்கள் பல ஆண்டுகளாக எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது உரிமைகளை நிலைநாட்டவும், சமூகத்தில் நீதியைப் பெறவுமே இந்த தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!