by Vignesh Perumal on | 2025-05-07 12:19 PM
பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருவதாகவும், எந்தவித தாக்குதலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்த்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 4 இடங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் காஷ்மீர் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் விக்ரம் மிஸ்த்ரி வலியுறுத்தியுள்ளார். இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அவர் விளக்கமளித்தார்.
மேலும், "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையானது, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!