by Vignesh Perumal on | 2025-05-07 09:56 AM
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (08.05.2025) வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நாளை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் +2 தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளார்.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்: dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டவுடன், மாணவர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!