by Vignesh Perumal on | 2025-05-06 10:45 PM
நேற்று (05.05.2025) மாலை சிவகங்கை நகரில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக சிவகங்கை மாவட்ட தலைவர் திரு. பாண்டித்துரை அவர்கள் தலைமை தாங்கினார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மதுரை முன்னாள் மாவட்ட தலைவர் திரு. சசிராமன், சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் திரு. சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரைகளை ஆற்றினர்.
ஹெச். ராஜா தனது உரையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டித்தார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!