by Vignesh Perumal on | 2025-05-06 10:30 PM
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புகழ்பெற்ற ரெணகாளியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று (06.05.2025) மாலை 7 மணியளவில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான முகூர்த்தக்கால் நடும் வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கோவில் பூசாரிகள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தக்காலை நட்டனர். இந்த நிகழ்ச்சியானது சித்திரை திருவிழாவின் தொடக்கத்தை குறிப்பதாகும்.
முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற உள்ளன. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் பொங்கல் விழா உள்ளிட்டவை வரும் நாட்களில் வெகு விமரிசையாக நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பழநி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் இந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் கலந்து கொண்டு அம்மனின் அருளாசியை பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். சித்திரை திருவிழா நாட்களில் பழநி ரெணகாளியம்மன் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!