by Vignesh Perumal on | 2025-05-06 02:54 PM
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும், இதற்கான சுற்றறிக்கை வெளியிடவும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆணையம் வெளியிட்டுள்ள பரிந்துரையில், "தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் உரிமை கோரப்படாத உடல்களை முறையாகவும், கண்ணியமான முறையிலும் அடக்கம் செய்ய உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதற்காக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளிலும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரிமை கோரப்படாத உடல்களை அடையாளம் காண்பதற்கான முறையான வழிமுறைகள், அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் யாரும் உரிமை கோரவில்லை என்றால் அவற்றை கண்ணியமாக அடக்கம் செய்வது போன்ற நடைமுறைகள் குறித்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த பரிந்துரை, தமிழகத்தில் உரிமை கோரப்படாமல் கண்டெடுக்கப்படும் உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை களைந்து, மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இந்த பரிந்துரையை ஏற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!