by Vignesh Perumal on | 2025-05-05 05:48 PM
புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் இருந்து துவார் நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், குளத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜு மற்றும் அவரது ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்தனர். கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அவ்வழியாக வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்தை கண்டு உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு மற்றும் அவரது ஓட்டுநரை உடனடியாக மீட்ட விஜயபாஸ்கர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், இருவரையும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தனது வாகனத்தில் அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக உதவி செய்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
புதுக்கோட்டை செய்தியாளர்-பழனியப்பன்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!