by Vignesh Perumal on | 2025-05-05 05:25 PM
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ரஷ்யாவின் முழு ஆதரவு எப்போதும் இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் இன்று (05.05.2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியானதற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்தவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியுடனான உரையாடலின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா தொடர்ந்து துணை நிற்கும் என்று புதின் தெரிவித்தார். இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில், ரஷ்ய அதிபரின் இந்த தொலைபேசி உரையாடல் மற்றும் ஆதரவு தெரிவிப்பு இந்தியாவிற்கு ஒரு முக்கிய ஆறுதலாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு இது மேலும் வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!