by Vignesh Perumal on | 2025-05-05 02:13 PM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின்போது, தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ரகசிய பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்தனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த தேடுதல் வேட்டையின்போது, தீவிரவாதிகள் பயன்படுத்திய மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் இரண்டு பக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வெடிபொருட்களை தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.
வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் இப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போதுதான், நன்கு மறைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த அதிரடி நடவடிக்கை மூலம், அப்பகுதியில் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. பூஞ்ச் வனப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரவாதிகளின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!