by Vignesh Perumal on | 2025-05-05 01:15 PM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூரைச் சேர்ந்த மாணவன், தான் எழுதிய நீட் நுழைவுத் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தை அடுத்த சித்தம்பலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவன், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். தேர்வு எழுதியதில் தனக்கு திருப்தி இல்லை என்றும், சரியாக எழுதவில்லை என்றும் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (04.05.2025) வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் திடீரென மாயமாகிவிட்டார்.
அவர் எழுதி வைத்த கடிதத்தில், "நீட் தேர்வை நான் ஒழுங்காக எழுதவில்லை" என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியடைந்து உடனடியாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மாணவன் எங்கு சென்றிருக்கக்கூடும், அவர் நலமாக இருக்கிறாரா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் அடையும் மன அழுத்தத்திற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!