by Vignesh Perumal on | 2025-05-04 08:36 PM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய (மே 4, 2025) அறிவிப்பின்படி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், கடலூர், விழுப்புரம், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை (மே 5) மற்றும் நாளை மறுநாள் (மே 6) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழையின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!