by Vignesh Perumal on | 2025-05-04 08:36 PM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய (மே 4, 2025) அறிவிப்பின்படி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், கடலூர், விழுப்புரம், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை (மே 5) மற்றும் நாளை மறுநாள் (மே 6) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழையின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!