by Vignesh Perumal on | 2025-05-03 12:54 PM
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோமையார்புரம் பைபாஸ் அருகே இன்று தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த நபர்கள், தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பேருந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து மற்றும் தாக்குதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!