by Vignesh Perumal on | 2025-05-02 04:20 PM
வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போஸ்டர், பேனர் போன்ற விளம்பரங்களை வெளியிட்டால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பதிவு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்தாலும் வழக்கறிஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல வழக்கறிஞர்கள் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் தொழில் கண்ணியமான தொழில் என்றும், விளம்பரம் செய்வது அந்த கண்ணியத்தை குறைத்துவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் விரைவில் விரிவான அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!