by Vignesh Perumal on | 2025-05-02 01:42 PM
மதுரை சித்திரை திருவிழாவில் அதிக விசை கொண்ட நீருந்துகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிக விசை கொண்ட நீருந்துகளைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விரத ஐதீகத்தின்படி பக்தர்கள் தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி மட்டுமே ஒருவரையொருவர் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் வேதிப்பொருட்கள் எதுவும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டுமே இந்த சடங்கிற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்களின் நலன் கருதியும், விழாவின் புனிதத்தன்மையைக் காக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!