| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

இன்ஸ்டாகிராம் காதல்...! பாலியல் தொழிலில் முடிவு...! போலீசார் அதிரடி விசாரணை...!

by Vignesh Perumal on | 2025-04-30 02:13 PM

Share:


இன்ஸ்டாகிராம் காதல்...! பாலியல் தொழிலில் முடிவு...! போலீசார் அதிரடி விசாரணை...!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நேற்று (ஏப்ரல் 29, 2025) புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் நட்பை ஏற்படுத்திய இளைஞர் ஒருவர், அவரை காதலிப்பதாக கூறி நம்ப வைத்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கோயம்புத்தூரிலிருந்து தனது கூட்டாளிகளுடன் காரில் புதுக்கடைக்கு அழைத்து வந்துள்ளார்.

சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது குறித்து சந்தேகமடைந்த பெற்றோர், புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

புதுக்கடை அருகே சிறுமியையும், அவரை அழைத்து வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கும்பலையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியை மீட்டு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்த போலீசார், இந்த கும்பலின் பின்னணி மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வரும் நட்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment