by Vignesh Perumal on | 2025-04-30 12:06 PM
மதுரை அருகே உள்ள கே.கே. நகரில் செயல்பட்டு வந்த ஸ்ரீ இளம் மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் நேற்று (29.04.2025) கோடை விடுமுறை சிறப்பு வகுப்பில் பயின்ற 4 வயது சிறுமி ஆருத்ரா, பள்ளி வளாகத்தில் இருந்த திறந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா உட்பட 7 பேர் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்த இந்த துயர சம்பவத்தை அடுத்து, மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், பள்ளியின் அலட்சியமே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்ததை அடுத்து, பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் அலட்சியத்தால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோனது குறித்து பலரும் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!