by Vignesh Perumal on | 2025-04-30 12:06 PM
மதுரை அருகே உள்ள கே.கே. நகரில் செயல்பட்டு வந்த ஸ்ரீ இளம் மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் நேற்று (29.04.2025) கோடை விடுமுறை சிறப்பு வகுப்பில் பயின்ற 4 வயது சிறுமி ஆருத்ரா, பள்ளி வளாகத்தில் இருந்த திறந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா உட்பட 7 பேர் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்த இந்த துயர சம்பவத்தை அடுத்து, மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், பள்ளியின் அலட்சியமே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்ததை அடுத்து, பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் அலட்சியத்தால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோனது குறித்து பலரும் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!