| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

நள்ளிரவில் பயங்கர தீ விபத்து...!

by Vignesh Perumal on | 2025-04-30 10:59 AM

Share:


நள்ளிரவில் பயங்கர தீ விபத்து...!

திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் இருந்து பழனி பைபாஸ் செல்லும் வழியில் அசோக் குமார் என்பவருக்கு சொந்தமான விறகு கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் விறகுக் கடையில் இருந்த விறகுகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தின் சரியான காரணம் மற்றும் சேதம் குறித்த முழு விவரங்கள் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment