| | | | | | | | | | | | | | | | | | |
உலகம் உலகம்

புதிய சகாப்தம்.., தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்பு; இடைக்கால அரசு கலைப்பு...!

by Vignesh Perumal on | 2026-02-18 03:02 PM

Share:


புதிய சகாப்தம்.., தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்பு; இடைக்கால அரசு கலைப்பு...!

வங்கதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்ற 13-வது நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 17 (செவ்வாய்க்கிழமை) அன்று தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் பிரதமராகப் பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது சஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  2024 ஆகஸ்ட் முதல் நாட்டை நிர்வகித்து வந்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, பிப்ரவரி 16 அன்று முறைப்படி பதவி விலகியது. 

தாரிக் ரஹ்மான் தலைமையில் 49 உறுப்பினர்களைகக்ஷக கொண்ட பிரம்மாண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் உள்ளனர்.

அமீர் கஸ்ரு மஹ்மூத் சௌத்ரி நிதி அமைச்சராகவும், மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் துறையை பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

 புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்ரவரி 18) நடைபெறுகிறது. இதில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கைச் சீரமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, தாரிக் ரஹ்மான் இன்று இரவு 7:00 மணிக்கு (வங்கதேச நேரப்படி) வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையில், நாட்டின் எதிர்காலத் திட்டங்கள், வெளியுறவுக் கொள்கை மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

17 ஆண்டுகால நாடுகடத்தப்பட்ட வாழ்க்கைக்குப் பிறகு கடந்த டிசம்பரில் வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான், தனது தாயார் கலேடா ஜியாவின் மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தி இந்தப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். 1991-க்குப் பிறகு அந்நாட்டின் முதல் ஆண் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment